حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ نُمَيْرٍ وَابْنُ أَبِي عُمَرَ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ كِلَاهُمَا عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا حَدِيثُ ابْنِ جُرَيْجٍ فَاتَّفَقَ لَفْظُهُ مَعَ حَدِيثِ مَالِكٍ لَمْ يَخْتَلِفَا إِلَّا فِي حَرْفَيْنِ قَالَ ابْنُ جُرَيْجٍ مَكَانَ قَيَّامُ قَيِّمُ وَقَالَ وَمَا أَسْرَرْتُ وَأَمَّا حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ فَفِيهِ بَعْضُ زِيَادَةٍ وَيُخَالِفُ مَالِكًا وَابْنَ جُرَيْجٍ فِي أَحْرُفٍ و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ حَدَّثَنَا عِمْرَانُ الْقَصِيرُ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ وَاللَّفْظُ قَرِيبٌ مِنْ أَلْفَاظِهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடு இரவில் தொழுவதற்காக எழுந்து,
“அல்லாஹும்ம லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வ லக்கல் ஹம்து, அன்த்த ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வமன் ஃபீஹின்ன. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக். வ கவ்லுக்கல் ஹக்கு. வ லிகாஉக ஹக். வல்ஜன்னத்து ஹக். வந்நாரு ஹக். வஸ்ஸாஅத்து ஹக். அல்லாஹும்ம லக அஸ்லம்து, வ பிக ஆமன்து, வ அலைக்க தவக்கல்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்து, வ இலைக்க ஹாக்கம்து, ஃபஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ அக்கர்த்து வ அஸ்ரர்த்து வ அஃலன்த்து. அன்த இலாஹீ. லா இலாஹ இல்லா அன்த்த” என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்களின் பூமியின் ஒளி நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றை நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவர்களின், உள்ளவற்றின் இறைவன் நீயே. நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது கூற்று உண்மையே. உன் தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமை நாள் உண்மை. அல்லாஹ்வே! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே மீள்வேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை).
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்புகள் :
இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி் அறிவிப்பில், (கய்யாம் என்பதற்கு பதிலாக) “கய்யிம்” எனும் சொல்லும் “நான் இரகசியமாகச் செய்த” என்பதைக் குறிக்க (வ அஸ்ரர்த்து என்பதற்கு பதிலாக) “வ மா அஸ்ரர்த்து” எனும் சொற்றொடரும் இடம்பெற்றுள்ளன. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இரண்டு சொற்றொடர்களில் மட்டும் சிறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
இப்னு உயைனா (ரஹ்) வழி அறிவிப்பில் சில கூடுதலான தகவல்கள் உள்ளன. மாலிக் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகிய இருவர் அறிவிக்கும் பல சொற்றொடர்களோடு இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் அறிவிப்பு வேறுபடுகின்றது.