அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1325

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ ‏

‏كَانَ ‏ ‏رَجُلٌ ‏ ‏يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْكَهْفِ ‏ ‏وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدُورُ وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ

ஒருவர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை(த் தமது இல்லத்தில்) ஓதிக் கொண்டிருந்தார். அங்கு நீண்ட இரு கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு குதிரையை ஒரு மேகத்திரள் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் அக்குதிரை மிரண்டது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) “அம்மேகம், குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ (ரலி)

Share this Hadith:

Leave a Comment