و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا فَإِنْ زَاغَتْ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணிக்கும் நேரத்தில் சூரியன் உச்சியிருந்து சாயாமலிருந்தால் லுஹ்ருத் தொழுகையை(யைத் தொழாமல் புறப்பட்டு) அஸ்ரு நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்துத் தொழுவார்கள். அவர்கள் பயணம் புறப்படுவதற்குமுன் சூரியன் உச்சியிருந்து சாய்ந்துவிட்டிருந்தால் லுஹ்ருத் தொழுத பின்னர் பயணம் மேற்கொள்வார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)