حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ قَالَ رَأَيْتُ رَجُلًا سَأَلَ الْأَسْوَدَ بْنَ يَزِيدَ وَهُوَ يُعَلِّمُ الْقُرْآنَ فِي الْمَسْجِدِ فَقَالَ :
كَيْفَ تَقْرَأُ هَذِهِ الْآيَةَ : فَهَلْ مِنْ مُدَّكِرٍ (54:32) أَدَالًا أَمْ ذَالًا؟ قَالَ بَلْ دَالًا سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مُدَّكِرٍ (دَالًا)
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் வந்து, “நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எவ்வாறு ஓதுகின்றீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என ‘தால்’ د எனும் எழுத்துடனா? அன்றி (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) ‘ஃதால்’ ذ எனும் எழுத்துடனா?” என்று கேட்டார். அதற்கு ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே (ஓதுகின்றேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘முத்தகிர்’ என ‘தால்’ (د எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் செவியுற்றேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்) விடையளித்தார்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அஸ்வத் (ரஹ்)