و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ السُّدِّيِّ قَالَ :
سَأَلْتُ أَنَسًا كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي أَوْ عَنْ يَسَارِي قَالَ أَمَّا أَنَا فَأَكْثَرُ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “தொழுது முடித்ததும் நான் எப்பக்கம் திரும்ப வேண்டும்? என் வலப்பக்கத்திலா? இடப்பக்கத்திலா?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “என்னைப் பொருத்த வரை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுது முடித்தபின்) தமது வலப்பக்கம் திரும்புவதையே அதிகமாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அஸ்ஸுத்தீ (ரஹ்)