அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1162

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏
‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِرَجُلٍ ‏ ‏يُصَلِّي وَقَدْ أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ فَكَلَّمَهُ بِشَيْءٍ لَا نَدْرِي مَا هُوَ فَلَمَّا انْصَرَفْنَا ‏ ‏أَحَطْنَا ‏ ‏نَقُولُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ لِي ‏ ‏يُوشِكُ أَنْ يُصَلِّيَ أَحَدُكُمْ الصُّبْحَ أَرْبَعًا

قَالَ ‏ ‏الْقَعْنَبِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ ابْنُ بُحَيْنَةَ ‏ ‏عَنْ أَبِيهِ قَالَ ‏ ‏أَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ ‏ ‏وَقَوْلُهُ عَنْ أَبِيهِ فِي هَذَا الْحَدِيثِ خَطَأٌ

சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒருவரைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள். என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. தொழுது முடித்ததும் நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம். அதற்கவர், “உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார் என்று கூறினார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

“இந்த ஹதீஸை, தம் தந்தை மாலிக் வழியாக அப்துல்லாஹ் அறிவிக்கிறார்” என்று அல்கஃனபீ (ரஹ்) கூறுகிறார்.

“இந்த ஹதீஸை அப்துல்லாஹ், தம் தந்தை மாலிக் வழியாக அறிவிக்கிறார் என்பது தவறான தகவலாகும்” என்று இமாம் முஸ்லிம் (அபுல்ஹுஸைன்) கூறுகிறார்கள்.

Share this Hadith:

Leave a Comment