حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي حُمَيْدٍ أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلْيَقُلْ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
قَالَ مُسْلِم سَمِعْتُ يَحْيَى بْنَ يَحْيَى يَقُولُ كَتَبْتُ هَذَا الْحَدِيثَ مِنْ كِتَابِ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ قَالَ بَلَغَنِي أَنَّ يَحْيَى الْحِمَّانِيَّ يَقُولُا وَأَبِي أُسَيْدٍ و حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي حُمَيْدٍ أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ
“உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும். பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது, ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகின்றேன்) என்று கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுமைத் (ரலி) / அபூஉஸைத் (ரலி)
குறிப்பு :
அப்துல் மாலிக் ஸயீத் பின் ஸுவைத் அல்அன்ஸாரீ (ரஹ்) வழி அறிவிப்பில்தான் இந்த ஹதீஸை அறிவிப்பவர், நபித்தோழர் அபூஹுமைதா? அன்றி நபித்தோழர் அபூஉஸைதா? எனும் ஐயத்தொனி உள்ளது.
“இந்த ஹதீஸை நான் ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் ஏட்டிலிருந்து எடுத்து எழுதினேன். அதில், ‘அபூஹுமைது, அபூஉஸைது ஆகிய இருவரும் அறிவித்தனர் என்பதுதான் எனக்கு எட்டிய தகவல் என்று யஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) கூறுகின்றார். (எனவே, அபூஹுமைதா? அபூஉஸைதா? எனும் ஐயத்துக்கு இடமில்லை)’ என்று ஸுலைமான் (ரஹ்), குறிப்பிட்டிருக்கின்றார்” என யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)கூறக்கேட்டு, இமாம் முஸ்லிம் (ரஹ்) பதிவு செய்திருக்கின்றார்கள்.