و حَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُا
كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ قَالَ قُلْتُ سَمِعْتَهُ مِنْ أَنَسٍ قَالَ إِي وَاللَّهِ
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்து கொண்டே) உறங்கி விட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்குப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான், “இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு கத்தாதா(ரஹ்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்) வழியாக ஷுஃபா (ரஹ்).