حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا هَمَّامٌ كِلَاهُمَا عَنْ قَتَادَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ :
قُلْتُ لِأَبِي ذَرٍّ لَوْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَأَلْتُهُ فَقَالَ عَنْ أَيِّ شَيْءٍ كُنْتَ تَسْأَلُهُ قَالَ كُنْتُ أَسْأَلُهُ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ أَبُو ذَرٍّ قَدْ سَأَلْتُ فَقَالَ رَأَيْتُ نُورًا
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருந்தால் அவர்களிடம் (ஒரு விஷயத்தைப் பற்றிக்) கேட்டிருப்பேன்” என்று அபூதர் (ரலி) அவர்களிடம் கூறினேன். “எதைப் பற்றிக் கேட்டிருப்பாய்?” என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான், “நீங்கள் உங்கள் இறைவனை (மிஃராஜின்போது) பார்த்தீர்களா? என்று கேட்டிருப்பேன்” என்றேன். அபூதர் (ரலி), ” (இதுபற்றி) நான் அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டேன். அதற்கு அவர்கள், (மிஃராஜின்போது) நான் கண்டது பேரொளியை (மட்டுமே) என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)