அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2148

و حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏

‏كَانَتْ ‏ ‏الْمُتْعَةُ ‏ ‏فِي الْحَجِّ لِأَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَاصَّةً

‘தமத்துஉ’ முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

குறிப்பு : பார்க்க ஹதீஸ் எண் 2136.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2147

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏قَالَ ‏

‏اجْتَمَعَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏وَعُثْمَانُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏فَكَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏أَوْ الْعُمْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏مَا تُرِيدُ إِلَى أَمْرٍ فَعَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَنْهَى عَنْهُ فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏دَعْنَا مِنْكَ فَقَالَ إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَدَعَكَ فَلَمَّا أَنْ رَأَى ‏ ‏عَلِيٌّ ‏ ‏ذَلِكَ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِهِمَا جَمِيعًا

‘உஸ்ஃபான்’ எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்திருந்த காலம் அது. எனவே, அவர்களிடம் அலீ (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன (மாற்றத்தை) விரும்புகின்றீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “நீங்கள் (இந்த முடிவில்) எம்மை விட்டுவிடுங்கள்!” என்று கூற, அதற்கு அலீ (ரலி) “என்னால் உங்களை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது” என்று சொன்னார்கள். எனினும், தமது நிலையில் உஸ்மான் (ரலி) (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி), ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து (கிரான்) தல்பியாச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)

குறிப்பு : உஸ்ஃபான் எனும் ஊர் மதீனாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2146

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ ‏

‏كَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏وَكَانَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏يَأْمُرُ بِهَا فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏لِعَلِيٍّ ‏ ‏كَلِمَةً ثُمَّ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏لَقَدْ عَلِمْتَ أَنَّا قَدْ ‏ ‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَجَلْ وَلَكِنَّا كُنَّا خَائِفِينَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ (ஹஜ்) செய்ய வேண்டாம் எனத் தடை விதித்திருந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) ‘தமத்துஉ’ செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி), அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி), “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தமத்துஉ’ செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “ஆம்; ஆயினும் அப்போது நாம் அச்சத்திலிருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்).

குறிப்பு : “நாம் அச்சத்திலிருந்தோம்” என்று உஸ்மான் (ரலி) கூறியது, “தமத்துஉ முறை ஹஜ்ஜில் குறை உண்டாகுமோ என்ற ஐயத்திலிருந்தோம்” எனும் பொருள் கொள்வதற்கு இடம்பாடுள்ள சொற்றொடராகும்.