அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2146

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ ‏

‏كَانَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏يَنْهَى عَنْ ‏ ‏الْمُتْعَةِ ‏ ‏وَكَانَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏يَأْمُرُ بِهَا فَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏لِعَلِيٍّ ‏ ‏كَلِمَةً ثُمَّ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏لَقَدْ عَلِمْتَ أَنَّا قَدْ ‏ ‏تَمَتَّعْنَا ‏ ‏مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَجَلْ وَلَكِنَّا كُنَّا خَائِفِينَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

உஸ்மான் (ரலி) ‘தமத்துஉ’ (ஹஜ்) செய்ய வேண்டாம் எனத் தடை விதித்திருந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) ‘தமத்துஉ’ செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி), அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி), “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘தமத்துஉ’ செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்று வினவினார்கள். அதற்கு உஸ்மான் (ரலி), “ஆம்; ஆயினும் அப்போது நாம் அச்சத்திலிருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்).

குறிப்பு : “நாம் அச்சத்திலிருந்தோம்” என்று உஸ்மான் (ரலி) கூறியது, “தமத்துஉ முறை ஹஜ்ஜில் குறை உண்டாகுமோ என்ற ஐயத்திலிருந்தோம்” எனும் பொருள் கொள்வதற்கு இடம்பாடுள்ள சொற்றொடராகும்.

Share this Hadith:

Leave a Comment