அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2259

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏كُرَيْبٌ: ‏

أَنَّهُ سَأَلَ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏كَيْفَ صَنَعْتُمْ حِينَ ‏ ‏رَدِفْتَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَشِيَّةَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَقَالَ جِئْنَا ‏ ‏الشِّعْبَ ‏ ‏الَّذِي ‏ ‏يُنِيخُ ‏ ‏النَّاسُ فِيهِ لِلْمَغْرِبِ ‏ ‏فَأَنَاخَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاقَتَهُ وَبَالَ وَمَا قَالَ ‏ ‏أَهَرَاقَ ‏ ‏الْمَاءَ ثُمَّ دَعَا بِالْوَضُوءِ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ حَتَّى جِئْنَا ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَأَقَامَ الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ النَّاسُ فِي مَنَازِلِهِمْ وَلَمْ ‏ ‏يَحُلُّوا ‏ ‏حَتَّى أَقَامَ الْعِشَاءَ الْآخِرَةَ فَصَلَّى ثُمَّ ‏ ‏حَلُّوا ‏ ‏قُلْتُ فَكَيْفَ فَعَلْتُمْ حِينَ أَصْبَحْتُمْ قَالَ ‏ ‏رَدِفَهُ ‏ ‏الْفَضْلُ بْنُ عَبَّاسٍ ‏ ‏وَانْطَلَقْتُ أَنَا فِي ‏ ‏سُبَّاقِ ‏ ‏قُرَيْشٍ ‏ ‏عَلَى رِجْلَيَّ

நான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது அரஃபா நாளின் மாலையில் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்களை) படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்யவில்லை.

நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்” என்று உஸாமா (ரலி) விடையளித்தார்கள்.

நான், “மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்தார்கள். நான் (மினாவிற்கு) முந்திச் சென்றுகொண்டிருந்த குறைஷியருடன் நடந்தேசென்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக குறைப் (ரஹ்)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2258

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏يَقُولُ: ‏

أَفَاضَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَلَمَّا انْتَهَى إِلَى ‏ ‏الشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أُسَامَةُ ‏ ‏أَرَاقَ الْمَاءَ ‏ ‏قَالَ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ قَالَ ثُمَّ سَارَ حَتَّى بَلَغَ ‏ ‏جَمْعًا ‏ ‏فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சுருக்கமாக உளூச் செய்தார்களேயன்றி, அழகுறச் செய்யவில்லை. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2257

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏مَوْلَى ‏ ‏الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ: ‏

انْصَرَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ ‏ ‏الدَّفْعَةِ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏إِلَى بَعْضِ تِلْكَ ‏ ‏الشِّعَابِ ‏ ‏لِحَاجَتِهِ فَصَبَبْتُ عَلَيْهِ مِنْ الْمَاءِ فَقُلْتُ أَتُصَلِّي فَقَالَ ‏ ‏الْمُصَلَّى أَمَامَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பிய பின் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். (அவர்கள் திரும்பிவந்ததும் உளூச் செய்வதற்காக) அவர்களுக்கு நான் நீர் ஊற்றினேன். அப்போது “நீங்கள் (மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுமிடம் உமக்கு எதிரே(உள்ள முஸ்தலிஃபாவில்)தான் உள்ளது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2256

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: ‏

دَفَعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏حَتَّى إِذَا كَانَ ‏ ‏بِالشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَلَمْ يُسْبِغْ ‏ ‏الْوُضُوءَ فَقُلْتُ لَهُ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏نَزَلَ فَتَوَضَّأَ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّاهَا وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் வழக்கம்போல் அழகுற உளூச் செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், “(மஃக்ரிப்) தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்று அவர்கள் கூறியபின், வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

+ இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் அடுத்தடுத்துத் தொழுவதற்கு, ‘ஜம்உ’ என்று சொல்லப்படும். ‘ஜம்உ’ எனும் அரபுச் சொல்லுக்கு, இணைத்தல்/சேர்த்தல் என்று பொருளாகும்.