حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :
لَدَدْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ فَأَشَارَ أَنْ لاَ تَلُدُّونِي . فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيضِ لِلدَّوَاءِ . فَلَمَّا أَفَاقَ قَالَ “ لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلاَّ لُدَّ غَيْرُ الْعَبَّاسِ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ ”
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோயுற்று (அரை மயக்கத்தில்) இருந்தபோது, அவர்களது வாயோரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் “மருந்து ஊற்ற வேண்டாம்” என்று எங்களுக்கு சைகை செய்தார்கள். “(எல்லா) நோயாளியும் மருந்தை வெறுப்பது போன்று தான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வெறுக்கின்றார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது, “ஒருவரும் விடுபடாமல் (வீட்டிலுள்ள) அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்; அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (என் வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)