அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 771

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ ‏ ‏مِثْلُ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக் கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது அப்போது அவர்கள், “வாகன (ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்றதை வைத்துக் கொள்ளுமாறு” கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 770

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ

كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مِثْلُ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ

و قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَلَا يَضُرُّهُ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ ‏

நாங்கள் (திறந்தவெளிகளில்) தொழுபவர்களாக இருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னால் கால்நடைகள் கடந்து செல்லும். எனவே, இது பற்றி நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, “உங்களில் ஒருவர் வாகன (ஒட்டக)த்தின் சேணப்பலகை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொள்ளட்டும். பிறகு அவரை எது கடந்து சென்றாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை” என்று அவர்கள் கூறினார்கள்.

குறிப்பு :

அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு அவரை யார் கடந்து சென்றாலும் அவருக்குப் பிரச்சனை இல்லை” என்று உயர்திணைச் சொல் இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 47, ஹதீஸ் எண்: 769

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ ‏ ‏مُؤْخِرَةِ ‏ ‏الرَّحْلِ ‏ ‏فَلْيُصَلِّ وَلَا يُبَالِ مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ ‏

“உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)