அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4715

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ :‏

أَنَّ هِشَامَ بْنَ حَكِيمٍ، وَجَدَ رَجُلاً وَهُوَ عَلَى حِمْصَ يُشَمِّسُ نَاسًا مِنَ النَّبَطِ فِي أَدَاءِ الْجِزْيَةِ فَقَالَ مَا هَذَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏”‏

ஹிம்ஸ் பகுதியின் ஆட்சியர் ஒருவர், ஜிஸ்யா செலுத்தாத விவசாயிகளில் சிலரை வெயிலில் நிறுத்தி வைத்திருப்பதை ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) கண்டார்கள்.

அப்போது ஹிஷாம் (ரலி), “என்ன இது?” என்று கேட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறு உலகில்) வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4714

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

مَرَّ هِشَامُ بْنُ حَكِيمِ بْنِ حِزَامٍ عَلَى أُنَاسٍ مِنَ الأَنْبَاطِ بِالشَّامِ قَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ فَقَالَ مَا شَأْنُهُمْ قَالُوا حُبِسُوا فِي الْجِزْيَةِ ‏.‏ فَقَالَ هِشَامٌ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏”‏


حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي حَدِيثِ جَرِيرٍ قَالَ وَأَمِيرُهُمْ يَوْمَئِذٍ عُمَيْرُ بْنُ سَعْدٍ عَلَى فِلَسْطِينَ فَدَخَلَ عَلَيْهِ فَحَدَّثَهُ فَأَمَرَ بِهِمْ فَخُلُّوا

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), ஷாம் (சிரியா) நாட்டில் விவசாயிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அந்த விவசாயிகள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி), “இவர்களுடைய விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். மக்கள், “ஜிஸ்யா (செலுத்த மறுத்தது) தொடர்பாகப் பிடிக்கப்பட்டனர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஹிஷாம் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறு உலகில்) வேதனை செய்வான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)


குறிப்பு :

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினத்தில் ஃபலஸ்தீனத்தின் ஆட்சியாளராக உமைர் பின் ஸஅத் என்பவர் இருந்தார். அவரிடம் ஹிஷாம் (ரலி) சென்று (மக்களுக்கு இழைக்கப்படும் வேதனையைத்) தெரிவித்தார்கள். உடனே உமைர் பின் ஸஅத் அவர்களின் ஆணையின் பேரில் அந்த விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4713

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ هِشَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ :‏

مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ وَقَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ وَصُبَّ عَلَى رُءُوسِهِمُ الزَّيْتُ فَقَالَ مَا هَذَا قِيلَ يُعَذَّبُونَ فِي الْخَرَاجِ ‏.‏ فَقَالَ أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ فِي الدُّنْيَا ‏”‏ ‏

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அம்மக்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி), “என்ன இது?” என்று கேட்டார்கள். “கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்” என்று சொல்லப் பட்டது.

அப்போது ஹிஷாம் (ரலி), “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறுமையில்) வேதனை செய்வான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)