وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ الْعَبْدِيُّ، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ سَعِيدٍ الْقَطَّانَ – حَدَّثَنَا أَبُو يُونُسَ الْقُشَيْرِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ” لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ” . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَيْسَ اللَّهُ يَقُولُ حِسَابًا يَسِيرًا قَالَ ” ذَاكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ ”
وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنِي يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ – عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ ” . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ أَبِي يُونُسَ .
நபி (ஸல்), “(மறுமை நாளில்) விசாரணைக்குள்ளாகும் எவரும் அழிந்தே போவார்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! ‘எவரது வினைப்பதிவேடு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் விசாரிக்கப்படும்’ (84:8) என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” என்று கேட்டேன்.
நபி (ஸல்), “இது (கேள்வி கணக்கு தொடர்பானதல்ல; மாறாக) மனிதர்கள் செய்த நன்மை தீமைகளின் பதிவேடு அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவது பற்றியதாகும்; எனினும், கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
உஸ்மான் பின் அல் அஸ்வது (ரஹ்) வழி அறிவிப்பு, “கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார் … என்று நபி (ஸல்) கூறினார்கள்” என ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.