அத்தியாயம்: 55, பாடம்: 15, ஹதீஸ் எண்: 5295

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا صَخْرٌ، – يَعْنِي ابْنَ جُوَيْرِيَةَ – عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ أَرَانِي فِي الْمَنَامِ أَتَسَوَّكُ بِسِوَاكٍ فَجَذَبَنِي رَجُلاَنِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا فَقِيلَ لِي كَبِّرْ ‏.‏ فَدَفَعْتُهُ إِلَى الأَكْبَرِ ‏”‏

”நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். அதைப் பெறுவதற்காக இருவர் முண்டியடித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராயிருந்தார். அவர்களில் வயதில் சிறியவருக்கு நான் அந்தக் குச்சியைக் கொடுத்தேன். அப்போது என்னிடம், ’முதியவருக்கு முதலில் கொடுங்கள்’ என்று சொல்லப்பட்டது. ஆகவே, அதை நான் வயதில் மூத்தவராயிருந்தவரிடம் கொடுத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)