حَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي نَضْرَةَ قَالَ
كُنْتُ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَأَتَاهُ آتٍ فَقَالَ إِنَّ ابْنَ عَبَّاسٍ وَابْنَ الزُّبَيْرِ اخْتَلَفَا فِي الْمُتْعَتَيْنِ فَقَالَ جَابِرٌ فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَهَانَا عَنْهُمَا عُمَرُ فَلَمْ نَعُدْ لَهُمَا
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் (இடைக்காலத் திருமணம், இடைக்காலப் பயனடையும் ஹஜ் ஆகிய) இரு ‘முத்ஆ’க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது” என்றார்.
அதற்கு ஜாபிர் (ரலி), “நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக் கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, அதற்குப் பின்னர் நாங்கள் அவ்விரண்டையும் செய்யவில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூநள்ரா (ரஹ்)