அத்தியாயம்: 1, பாடம்: 1.05, ஹதீஸ் எண்: 22

و حَدَّثَنِي ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عِكْرِمَةَ بْنَ خَالِدٍ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏طَاوُسًا ‏ ‏أَنَّ رَجُلًا قَالَ ‏ ‏لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

‏أَلَا ‏ ‏تَغْزُو فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ الْإِسْلَامَ بُنِيَ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَحَجِّ ‏ ‏الْبَيْتِ

ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அறப்போரில் கலந்து கொள்வதில்லையே (ஏன்)?” என்று கேட்டார். அதற்கு, “இஸ்லாம் என்பது ஐந்து (அடிப்படைகள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஜகாத் செலுத்துவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

“எனக்குப் பதினான்கு வயது ஆகியிருக்கும்போது உஹுதுப் போர் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கோரி, மறுக்கப்பட்டேன். பின்னர் நடந்த அகழ்ப் போரின்போது நான் பதினைந்து வயதைக் கடந்து விட்டிருந்ததால் அனுமதிக்கப்பட்டு அகழ்ப் போரில் நான் கலந்து கொண்டேன்” என்று மேற்காணும் ஹதீஸை அறிவிக்கும் அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமின் 3473ஆவது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

Share this Hadith:

Leave a Comment