அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2663

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

‏تَزَوَّجْتُ امْرَأَةً فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تَزَوَّجْتَ قُلْتُ نَعَمْ قَالَ أَبِكْرًا أَمْ ‏ ‏ثَيِّبًا ‏ ‏قُلْتُ ‏ ‏ثَيِّبًا ‏ ‏قَالَ فَأَيْنَ أَنْتَ مِنْ الْعَذَارَى وَلِعَابِهَا ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏فَقَالَ ‏ ‏قَدْ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏وَإِنَّمَا قَالَ ‏ ‏فَهَلَّا جَارِيَةً تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ

நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ மணமுடித்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்), “கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? கன்னி கழிந்த பெண்ணை மணந்துகொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “கன்னி கழிந்த பெண்ணை மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்), “கன்னிப் பெண்ககளுடன் (கொஞ்சிக் குலவி) விளையாடுகின்ற வாய்ப்பை விட்டும் நீ விலகிச் சென்றுவிட்டாயே?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை (அறிவிப்பாளர்) அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் ஷுஅபா (ரஹ்) கூறியபோது, “நபி (ஸல்), ‘கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே!’ என என்னிடம் கேட்டார்கள் என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள்” என்று அம்ரு பின் தீனார் (ரஹ்) கூறினார்.

Share this Hadith: