حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا الْمُعْتَمِرُ قَالَ سَمِعْتُ أَبِي حَدَّثَنَا أَبُو نَضْرَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:
كُنَّا فِي مَسِيرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا عَلَى نَاضِحٍ إِنَّمَا هُوَ فِي أُخْرَيَاتِ النَّاسِ قَالَ فَضَرَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ نَخَسَهُ أُرَاهُ قَالَ بِشَيْءٍ كَانَ مَعَهُ قَالَ فَجَعَلَ بَعْدَ ذَلِكَ يَتَقَدَّمُ النَّاسَ يُنَازِعُنِي حَتَّى إِنِّي لِأَكُفُّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ أَتَبِيعُنِيهِ بِكَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ قَالَ قُلْتُ هُوَ لَكَ يَا نَبِيَّ اللَّهِ قَالَ وَقَالَ لِي أَتَزَوَّجْتَ بَعْدَ أَبِيكَ قُلْتُ نَعَمْ قَالَ ثَيِّبًا أَمْ بِكْرًا قَالَ قُلْتُ ثَيِّبًا قَالَ فَهَلَّا تَزَوَّجْتَ بِكْرًا تُضَاحِكُكَ وَتُضَاحِكُهَا وَتُلَاعِبُكَ وَتُلَاعِبُهَا
قَالَ أَبُو نَضْرَةَ فَكَانَتْ كَلِمَةً يَقُولُهَا الْمُسْلِمُونَ افْعَلْ كَذَا وَكَذَا وَاللَّهُ يَغْفِرُ لَكَ
நாங்கள் ஒரு (போரை முடித்துத் திரும்பும்) பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நான் நீர் இறைக்கும் எனது ஒட்டகத்தின் மீதிருந்தேன். அது மக்களின் பின்வரிசையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்மிடமிருந்த ஒரு பொருளால் அதை அடித்தார்கள் அல்லது குத்தினார்கள். பின்னர் அது எனக்கு அடங்காமல் மக்களை முந்திக்கொண்டு விரைந்து ஓடத் துவங்கியது. பின்னர் அதை நான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இ(ந்த ஒட்டகத்)தை இன்ன விலைக்கு எனக்கு நீ விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். அவர்கள், “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இன்ன விலைக்கு இதை நீ எனக்கு விற்றுவிடுகிறாயா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது” என்றேன். அவர்கள் என்னிடம், “உன் தந்தை(யின் மறைவு)க்குப் பின் நீ மணமுடித்தாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணையா, கன்னிப் பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், “கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந் தேன்)” என்றேன். “ஏன், கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் அவள் உனக்கும் நீ அவளுக்கும் மகிழ்வூட்டலாமே; அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
பின்னர் (“அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இதை நீ இன்ன விலைக்கு எனக்கு விற்றுவிடுகிறாயா?” எனும்) இச்சொல்லே, “அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இன்னின்னதைச் செய்” என்று முஸ்லிம்கள் கூறுகின்ற சொல் வழக்காக அமைந்தது என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) கூறுகின்றார்.