அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 406

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي سَفَرٍ فَقَالَ يَا ‏ ‏مُغِيرَةُ ‏ ‏خُذْ ‏ ‏الْإِدَاوَةَ ‏ ‏فَأَخَذْتُهَا ثُمَّ خَرَجْتُ مَعَهُ فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى ‏ ‏تَوَارَى ‏ ‏عَنِّي فَقَضَى حَاجَتَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ ‏ ‏جُبَّةٌ ‏ ‏شَامِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ فَذَهَبَ يُخْرِجُ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ عَلَيْهِ فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا فَصَبَبْتُ عَلَيْهِ ‏ ‏فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், “முஃகீரா! தண்ணீர் குவளையை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள். நான் (நீர் நிறைந்த குவளையை) எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னை விட்டு மறைந்து, இயற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அவர்கள், கைப்பகுதி குறுகலான ஷாம் நாட்டு (இறுக்கமான) நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டையிலிருந்து வெளியே கழற்றி எடுக்க முயன்றார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிலிருந்து வெளியே எடுத்தார்கள். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்து விட்டுப் பின்னர் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

Share this Hadith:

Leave a Comment