و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا عِيسَى حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ :
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَ حَاجَتَهُ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ فَضَاقَتْ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ رَأْسَهُ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக (ஒருமுறை) புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களை நான் எதிர் கொண்டேன். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்)கைகளைக் கழுவி விட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவ முயன்றபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்ததால், தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையைத் தடவி மஸஹுச் செய்தார்கள். தம் காலுரைகள் மீதும் (அவ்வாறே கைகளை ஈரப்படுத்தி) தடவி மஸஹுச் செய்தார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)