அத்தியாயம்: 9, பாடம்: 00, ஹதீஸ் எண்: 1488

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏أَنَّ ‏ ‏عَبَّادَ بْنَ تَمِيمٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏أَخْبَرَهُ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي وَأَنَّهُ لَمَّا أَرَادَ أَنْ يَدْعُوَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ ‏ ‏وَحَوَّلَ ‏ ‏رِدَاءَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மழை வேண்டித் (தொழுவதற்காகத்) தொழுகைத் திடலுக்குச் சென்றார்கள்; பிரார்த்திக்க நாடியபோது கிப்லாவை முன்னோக்கி நின்று, தமது மேல் துண்டை மாற்றி போட்டுக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி)


குறிப்பு : ‘மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது’: வழக்கமாக மேல்துண்டை அணியும்போது, அதன் நடுப்பகுதி பிடறியில் இருக்கும்; இரு முனைகளும் மார்பில் புரளும். அதை மாற்றிப் போட்டால் நடுப்பகுதி கழுத்தில் இருக்கும்; இரு முனைகளும் முதுகில் புரளும்.

Share this Hadith:

Leave a Comment