و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ:
ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَبَائِرَ أَوْ سُئِلَ عَنْ الْكَبَائِرِ فَقَالَ الشِّرْكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَالَ أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ قَالَ قَوْلُ الزُّورِ أَوْ قَالَ شَهَادَةُ الزُّورِ
قَالَ شُعْبَةُ وَأَكْبَرُ ظَنِّي أَنَّهُ شَهَادَةُ الزُّورِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள் அல்லது பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டபோது, “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெருபாவங்களாகும்)” என்று கூறினார்கள். பிறகு “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டு விட்டு, “பொய் பேசுவது அல்லது பொய் சாட்சி கூறுவதுதான் (அது)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறுபவர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “(அது) ‘பொய் சாட்சி’ என்ற சொல்தான் என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிடுகிறார்.