حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصِنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَات
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பாவங்களைத் தவிர்த்திடுவீர்!” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?” என்று கேட்கப்பட்டது.
“அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
சூனியம் செய்வது,
(சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக்கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது,
அநாதைகளின் செல்வத்தை உண்பது,
வட்டி உண்பது,
போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,
இறை நம்பிக்கை கொண்ட, குற்றமற்றப் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)