حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ وَأَبُو عَاصِمٍ الْحَنَفِيُّ وَاللَّفْظُ لِقُتَيْبَةَ قَالُوا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ قَالَ :
جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لِأَبِي فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحَضْرَمِيِّ أَلَكَ بَيِّنَةٌ قَالَ لَا قَالَ فَلَكَ يَمِينُهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لَا يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَيْءٍ فَقَالَ لَيْسَ لَكَ مِنْهُ إِلَّا ذَلِكَ فَانْطَلَقَ لِيَحْلِفَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَدْبَرَ أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ
நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) ‘ஹள்ர மவ்த்’ எனும் இடத்தைச் சேர்ந்த (ஹள்ரமீ) ஒருவரும் ‘கிந்தா’ எனும் குலத்தைச் சேர்ந்த (கிந்தீ) இன்னொருவரும் வந்தனர். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் பறித்துக் கொண்டுவிட்டார்” என்று ஹள்ரமீ வழக்குரைத்தார். அதற்கு, “அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கிந்தீ மறுப்புரைத்தார்.
ஹள்ரமீயிடம், “உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். அவர், “‘இல்லை” என்று பதிலளித்தார். “எனில், அவரது சத்தியம்தான் உமக்கு(த் தீர்வு)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “அவர் பொல்லாதவர்; தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார்; விவகாரம் என்று வந்துவிட்டால் நேர்மையைப் பற்றி அவர் சிந்தித்தும் பார்ப்பவரல்லர்” என்று ஹள்ரமீ கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதைத் தவிர உம(து வழக்கு)க்கு வேறு தீர்வில்லை” என்று கூறினார்கள். சத்தியம் செய்வதற்காக (கிந்தீ) கிளம்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : வாஇல் பின் ஹுஜ்ரு (ரலி)