حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا أَبُو الْأَشْهَبِ عَنْ الْحَسَنِ قَالَ :
عَادَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ مَعْقِلَ بْنَ يَسَارٍ الْمُزنِيَّ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ قَالَ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ عَلِمْتُ أَنَّ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ
மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) நோய்வாய்ப்பட்டு இறந்தார். (அதற்கு முன்னர்) அவரை உடல் நலம் விசாரிப்பதற்காக (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ரஹ்) சென்றிருந்தார்.
அப்போது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை இப்போது உங்களுக்கு அறிவிக்கப்போகின்றேன். நான் இன்னும் (சிலகாலம்) உயிர் வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) நான் அறிவிக்கப்போவதில்லை. (கேளுங்கள்:) குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, தம் பொறுப்பிலிருந்த மக்களை அவர் ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்து விட்டாரெனில், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்” என மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) கூறினார்.
அறிவிப்பாளர் : மஅகில் பின் யஸார் அல்முஸினீ (ரலி) வழியாக ஹஸன் அல் பஸரீ (ரஹ்)