و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي يُونُسُ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْيِ قَالَ فِي حَدِيثِهِ فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنْ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسًا عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجُئِثْتُ مِنْهُ فَرَقًا فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي فَدَثَّرُونِي فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى [يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ]
وَهِيَ الْأَوْثَانُ قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ
و حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ثُمَّ فَتَرَ الْوَحْيُ عَنِّي فَتْرَةً فَبَيْنَا أَنَا أَمْشِي ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ يُونُسَ غَيْرَ أَنَّهُ قَالَ فَجُئِثْتُ مِنْهُ فَرَقًا حَتَّى هَوَيْتُ إِلَى الْأَرْضِ قَالَ و قَالَ أَبُو سَلَمَةَ وَالرُّجْزُ الْأَوْثَانُ قَالَ ثُمَّ حَمِيَ الْوَحْيُ بَعْدُ وَتَتَابَعَ و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَ حَدِيثِ يُونُسَ وَقَالَ فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى [يَا أَيُّهَا الْمُدَّثِّرُ إِلَى قَوْلِهِ وَالرُّجْزَ فَاهْجُرْ]
قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلَاةُ وَهِيَ الْأَوْثَانُ وَقَالَ فَجُئِثْتُ مِنْهُ كَمَا قَالَ عُقَيْلٌ
“நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். (குகை) ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போனேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி வந்து (என் மனைவியிடம்), “என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்” என்று சொன்னேன். அவர்களும் போர்த்தி விட்டார்கள். அப்போது, “போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுவீராக! (எழுந்து) எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப் படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களை, நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். பின்னர் வஹீ தொடர்ந்து வரலாயிற்று” என்று தமக்கு வஹீ தடைப்பட்ட (இடைவெளி) காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
மேற்கண்ட (74:5ஆவது) வசனத்திலுள்ள ‘அர்ருஜ்ஸு’ (அசுத்தம்) என்பது, வணங்கப்படும் சிலைகளைக் குறிப்பதாகும்.
அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… பின்னர் சிறிது காலம் எனக்கு வஹீ நின்று போயிருந்தது. (ஒருநாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன் …” என்பதைத் தொடர்ந்து “அவரைப் பார்த்ததில் அஞ்சி அதிர்ந்து போய்த் தரையில் விழுந்து விட்டேன் …” என்றும் “பின்னர் வேத அறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று” என்றும் நபி (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் “அர்ருஜ்ஸு என்பது வணங்கப்படும் சிலைகளைக் குறிக்கும்” என்ற விளக்கம் இடம் பெறுகிறது.
மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “போர்த்திக் கொண்டிருப்பவரே! … என்பதில் தொடங்கி, … அசுத்தங்களிலிருந்து விலகியிருப்பீராக எனும் (74:1-5) வசனங்கள் முடிய நற்பேறுகளுக்கு உரியவனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் அருளினான். அவை, முறையான தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளப்பட்ட வசனங்களாகும்” என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் ‘வணங்கப்படும் சிலைகள்’ பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.