حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَيْ رَبِّ قَدِّمْنِي إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِي ظِلِّهَا
وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ وَلَمْ يَذْكُرْ فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنْ الْحُورِ الْعِينِ فَتَقُولَانِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ قَالَ فَيَقُولُ مَا أُعْطِيَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ
“(நரகவாசி) ஒருவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பி விடுவான். பின்னர், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், ‘என் இறைவா! இந்த மரத்திற்கு என்னை முன்நடத்துவாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்’ என்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).
குறிப்பு :
மேற்காணும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது அறிவிப்பில், இபுனு மஸ்ஊத் (ரலி) அவர்களது அறிவிப்பிலுள்ள, “ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்?” என்பதிலிருந்து இறுதிவரையுள்ளவை தவிர்த்து, “நீ இன்னின்னதை ஆசைப்படு! என்று அறிவுறுத்தப் படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். நீ ஆசைப்பட்டதும் உலகத்தின் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அவரிடம் (அல்லாஹ்வால்) கூறப்படும்” என்ற சொற்றொடர்களும் இடம்பெறுகின்றன. மேற்கொண்டு, “அவர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது ஹூருல்ஈன் எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!. அவன்தான் எங்களுக்காக உங்களையும் உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்’ என்று கூறுவார்கள். அதற்கவர், ‘எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை’ என்று (மகிழ்ந்து) கூறுவார். இவர்தாம் சொக்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவியுடைவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.