حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا حَاجِبُ بْنُ عُمَرَ أَبُو خُشَيْنَةَ الثَّقَفِيُّ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யாவர், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் எத்தகையவர்கள் எனில், மந்திரித்துப் பார்க்க மாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருப்பர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)