حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ لَا يَدْرِي أَبُو حَازِمٍ أَيَّهُمَا قَالَ مُتَمَاسِكُونَ آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا لَا يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ
“நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம்/ஏழுலட்சம் பேர் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் இறுதியானவர் நுழையாதவரை முதலாமவர் நுழையமாட்டார் (அனைவரும் ஒரே நேரத்தில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவின் முழுநிலவு வடிவிலிருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)
குறிப்புகள் :
விசாரணையின்றி சொர்க்கம் புகுவோர் எழுபதாயிரமா ஏழுஇலட்சமா என்பதில் அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு உறுதியில்லை.
ஏழு, எழுபது, ஏழாயிரம், ஏழு இலட்சம் ஆகிய எண்கள் அரபு மொழியில், “பெருவாரியான/அதிக எண்ணிக்கையிலான” என்பதன் இலக்கியக் குறியீடுகளாகும்.