அத்தியாயம்: 11, பாடம்: 10, ஹதீஸ் எண்: 1554

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ خَازِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏ ” ‏يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا“ ‏ ” ‏وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ‏“

الَتْ كَانَ مِنْهُ ‏ ‏النِّيَاحَةُ ‏ ‏قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِلَّا آلَ فُلَانٍ فَإِنَّهُمْ كَانُوا ‏ ‏أَسْعَدُونِي ‏ ‏فِي الْجَاهِلِيَّةِ فَلَا بُدَّ لِي مِنْ أَنْ ‏ ‏أُسْعِدَهُمْ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَّا آلَ فُلَانٍ

“நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் …” (60:12) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒப்பாரி வைப்பது தொடர்பான உறுதி மொழியும் அதில் பொதிந்திருந்தது . அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே, இன்னாரின் குடும்பத்தாருக்கு நான் ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் எனக்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் அவர்கள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தனர். எனவே, (பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவர்களுக்குப் பிரதியுதவி செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இன்னாரின் குடும்பத்திற்குத் தவிர” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி).

Share this Hadith:

Leave a Comment