அத்தியாயம்: 11, பாடம்: 25, ஹதீஸ் எண்: 1597

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏رَآنِي ‏ ‏نَافِعُ بْنُ جُبَيْرٍ ‏ ‏وَنَحْنُ فِي جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏ ‏تُوضَعَ ‏ ‏الْجَنَازَةُ فَقَالَ لِي مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏فَقَالَ ‏ ‏نَافِعٌ ‏ ‏فَإِنَّ ‏ ‏مَسْعُودَ بْنَ الْحَكَمِ ‏ ‏حَدَّثَنِي عَنْ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَعَدَ

நாங்கள் ஒரு நல்லடக்க நிகழ்ச்சியில் இருந்தபோது நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) ஜனாஸா கீழே வைக்கப்படுவதை எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருந்தார். நான் நின்றுகொண்டே இருந்ததைக் கண்டு, “ஏன் நிற்கின்றீர்கள்?” என்று என்னிடம் கேட்டார். நான், “ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்து நின்றுகொண்டிருப்பதற்கு அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் ஒரு ஹதீஸே காரணம்” என்றேன்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பிரேதத்தைக் கண்டால் ஆரம்பக் காலத்தில்) எழுந்து நின்றார்கள். பிற்காலத்தில் உட்கார்ந்து விட்டார்கள்” என அலீ பின் அபீதாலிப் (ரலி) கூறியதாக மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) தமக்கு அறிவித்ததை எடுத்துச் சொன்னார்.

அறிவிப்பாளர் : மஸ்ஊத் பின் அல்ஹகம் (ரலி) வழியாக வாகித் பின் அம்ரு பின் ஸஅத் பின் முஆத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment