அத்தியாயம்: 12, பாடம்: 20, ஹதீஸ் எண்: 1689

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏

‏ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏النَّارَ فَأَعْرَضَ ‏ ‏وَأَشَاحَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏اتَّقُوا النَّارَ ثُمَّ أَعْرَضَ ‏ ‏وَأَشَاحَ ‏ ‏حَتَّى ظَنَنَّا أَنَّهُ كَأَنَّمَا يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ اتَّقُوا النَّارَ وَلَوْ ‏ ‏بِشِقِّ ‏ ‏تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ ‏

‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏كَأَنَّمَا وَقَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். பின்னர் “நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று மீண்டும்) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம். பின்னர் “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் – அதுவும் இல்லாதவர் – இன்சொல்லைக் கொண்டேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி)

குறிப்பு: அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், ‘பார்க்கிறார்கள் போலும்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ‘அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்’ என்றே இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment