அத்தியாயம்: 12, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1751

حَدَّثَنَا ‏ ‏أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمُ بْنُ وَرْدَانَ أَبُو صَالِحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ السَّخْتِيَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏قَالَ ‏

‏قَدِمَتْ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَقْبِيَةٌ فَقَالَ لِي أَبِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏انْطَلِقْ بِنَا إِلَيْهِ عَسَى أَنْ يُعْطِيَنَا مِنْهَا شَيْئًا قَالَ فَقَامَ أَبِي عَلَى الْبَابِ فَتَكَلَّمَ فَعَرَفَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَوْتَهُ فَخَرَجَ وَمَعَهُ قَبَاءٌ وَهُوَ يُرِيهِ مَحَاسِنَهُ وَهُوَ يَقُولُ ‏ ‏خَبَأْتُ هَذَا لَكَ خَبَأْتُ هَذَا لَكَ

நபி (ஸல்) அவர்களுக்குச் சில மேலங்கிகள் வந்தன. என்னிடம் என் தந்தை மக்ரமா (ரலி), “(என்னோடு வா!) நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபியவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். அவரது குரலை நபி (ஸல்) புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக் கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்து, “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்; உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1750

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏قَسَمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَقْبِيَةً ‏ ‏وَلَمْ يُعْطِ ‏ ‏مَخْرَمَةَ ‏ ‏شَيْئًا فَقَالَ ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏يَا بُنَيَّ انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْطَلَقْتُ مَعَهُ قَالَ ادْخُلْ فَادْعُهُ لِي قَالَ فَدَعَوْتُهُ لَهُ فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ ‏ ‏قَبَاءٌ ‏ ‏مِنْهَا فَقَالَ ‏ ‏خَبَأْتُ هَذَا لَكَ قَالَ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ رَضِيَ ‏ ‏مَخْرَمَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (‘கபா’ எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்கள் சிலருக்கு)ப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, என் தந்தை (என்னிடம்), “அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்” என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்குச் சென்று சேர்ந்ததும்) “நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே என் தந்தையிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் தந்தையிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் (‘கபா’ எனும்) அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்” என்று சொன்னார்கள். என் தந்தை அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 12, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1749

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَالِكًا ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ ‏ ‏أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَيْهِ رِدَاءٌ نَجْرَانِيٌّ غَلِيظُ ‏ ‏الْحَاشِيَةِ ‏ ‏فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ ‏ ‏فَجَبَذَهُ ‏ ‏بِرِدَائِهِ ‏ ‏جَبْذَةً ‏ ‏شَدِيدَةً نَظَرْتُ إِلَى صَفْحَةِ عُنُقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَدْ أَثَّرَتْ بِهَا ‏ ‏حَاشِيَةُ ‏ ‏الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ثُمَّ قَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ ‏

‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ‏ ‏مِنْ الزِّيَادَةِ قَالَ ثُمَّ جَبَذَهُ إِلَيْهِ جَبْذَةً رَجَعَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي نَحْرِ الْأَعْرَابِيِّ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏هَمَّامٍ ‏ ‏فَجَاذَبَهُ حَتَّى انْشَقَّ ‏ ‏الْبُرْدُ ‏ ‏وَحَتَّى بَقِيَتْ حَاشِيَتُهُ فِي عُنُقِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு நாள்) நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்த சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், “முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவருக்குக் கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்புகள் : இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பிறகு அந்தக் கிராமவாசி அந்த சால்வையை வேகமாக இழுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்திலேயே இருந்தது” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 12, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1748

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلْمَانَ بْنِ رَبِيعَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَسَمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَسْمًا فَقُلْتُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَغَيْرُ هَؤُلَاءِ كَانَ أَحَقَّ بِهِ مِنْهُمْ قَالَ ‏ ‏إِنَّهُمْ خَيَّرُونِي أَنْ يَسْأَلُونِي بِالْفُحْشِ أَوْ يُبَخِّلُونِي فَلَسْتُ بِبَاخِلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிலருக்குத் தானப் பொருட்களை) பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே!, அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைவிட மிகவும் தகுதியுடைய பிறர் உள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவர்கள் அருவருப்பாகப் பேசியும் என்னைக் கஞ்சன் என்று சொல்லியும் என்னிடம் வந்து கேட்கின்றனர். ஆனால், நான் கஞ்சன் அல்லன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல்கத்தாப் (ரலி)