அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1754

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏

‏جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏فَقَالَ أَفِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ فَقَالُوا لَا إِلَّا ‏ ‏ابْنُ أُخْتٍ ‏ ‏لَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ابْنَ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ فَقَالَ إِنَّ ‏ ‏قُرَيْشًا ‏ ‏حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعْبًا ‏ ‏لَسَلَكْتُ ‏ ‏شِعْبَ ‏ ‏الْأَنْصَارِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அன்ஸாரிகளை ஒன்றுதிரட்டி, “உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு) இருக்கின்றாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்ஸாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (பிறத்தியார்) வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஒரு சமுதாயத்தாரின் சகோதரியின் புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!” என்று கூறிவிட்டு, “குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போதுதான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்ப வில்லையா? மக்கள் கூட்டம் ஒரு கணவாய் வழியில் நடந்து செல்ல, அன்ஸாரிகள் வேறொரு கணவாய் வழியில் சென்றால் நான் அன்ஸாரிகளின் வழியில்தான் செல்வேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment