حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ
لَمَّا فُتِحَتْ مَكَّةُ قَسَمَ الْغَنَائِمَ فِي قُرَيْشٍ فَقَالَتْ الْأَنْصَارُ إِنَّ هَذَا لَهُوَ الْعَجَبُ إِنَّ سُيُوفَنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ وَإِنَّ غَنَائِمَنَا تُرَدُّ عَلَيْهِمْ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَمَعَهُمْ فَقَالَ مَا الَّذِي بَلَغَنِي عَنْكُمْ قَالُوا هُوَ الَّذِي بَلَغَكَ وَكَانُوا لَا يَكْذِبُونَ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا إِلَى بُيُوتِهِمْ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا وَسَلَكَتْ الْأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ أَوْ شِعْبَ الْأَنْصَارِ
மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) குறைஷியர்களுக்குப் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்ஸாரிகள் (சிலர்), “இது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது!. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் குறைஷியருக்கு மடை மாற்றம் செய்யபடுகின்றன” என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்ஸாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, “உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தியின் நிலை என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அதற்கு அன்ஸாரிகள் “உங்களுக்கு எட்டிய செய்தி உண்மைதான்” என்று பதிலளித்தனர். அன்ஸாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்ஸாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்ஸாரிகளின் கணவாயின் அல்லது அன்ஸாரிகளின் பள்ளத்தாக்கின் வழிச் செல்வேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)