அத்தியாயம்: 12, பாடம்: 48, ஹதீஸ் எண்: 1774

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ‏ ‏مَوْلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏أَنَّ ‏ ‏الْحَرُورِيَّةَ ‏ ‏لَمَّا خَرَجَتْ وَهُوَ مَعَ ‏ ‏عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالُوا لَا حُكْمَ إِلَّا لِلَّهِ قَالَ ‏ ‏عَلِيٌّ ‏ ‏كَلِمَةُ حَقٍّ أُرِيدَ بِهَا بَاطِلٌ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَصَفَ نَاسًا إِنِّي لَأَعْرِفُ صِفَتَهُمْ فِي هَؤُلَاءِ ‏ ‏يَقُولُونَ الْحَقَّ بِأَلْسِنَتِهِمْ لَا يَجُوزُ هَذَا مِنْهُمْ ‏ ‏وَأَشَارَ إِلَى حَلْقِهِ ‏ ‏مِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَيْهِ مِنْهُمْ أَسْوَدُ إِحْدَى يَدَيْهِ طُبْيُ شَاةٍ أَوْ حَلَمَةُ ثَدْيٍ ‏

‏فَلَمَّا قَتَلَهُمْ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ انْظُرُوا فَنَظَرُوا فَلَمْ يَجِدُوا شَيْئًا فَقَالَ ارْجِعُوا فَوَاللَّهِ مَا كَذَبْتُ وَلَا كُذِبْتُ مَرَّتَيْنِ ‏ ‏أَوْ ثَلَاثًا ‏ ‏ثُمَّ وَجَدُوهُ فِي خَرِبَةٍ فَأَتَوْا بِهِ حَتَّى وَضَعُوهُ بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏وَأَنَا حَاضِرُ ذَلِكَ مِنْ أَمْرِهِمْ وَقَوْلِ ‏ ‏عَلِيٍّ ‏ ‏فِيهِمْ ‏ ‏زَادَ ‏ ‏يُونُسُ ‏ ‏فِي رِوَايَتِهِ قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ ‏ ‏ابْنِ حُنَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ رَأَيْتُ ذَلِكَ الْأَسْوَدَ

ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றியபோது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் “ஆட்சி என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்)” எனும் முழக்கத்தை முன்வைத்தனர். அப்போது அலீ (ரலி), “சத்திய வார்த்தை, அசத்தியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சிலரைப் பற்றி(ய அடையாளங்களை) எங்களுக்குத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) குறிப்பிட்ட அப் பண்புகளை (காரிஜிய்யாக்களான) இவர்களிடம் நான் பார்க்கின்றேன். இவர்கள் பேசும் உண்மை, நாவால் மட்டுமே. ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது. அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியவன், இவர்களில் கறுப்பு நிறமுடைய ஒரு மனிதனாவான். அவனது கைகளில் ஒன்று ஆட்டின் பால் மடியைப் போன்றிருக்கும்; அல்லது (பெண்ணின்) மார்புக் காம்பைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.

அலீ (ரலி), (காரிஜிய்யாக்களுடன் போரிட்டு) அவர்களைக் கொன்றொழித்தபோது, “(அந்தக் கறுப்பு மனிதனைத்) தேடிப் பாருங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் (தேடிப்) பார்த்தபோது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலீ (ரலி), “மீண்டும் சென்று பாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய்யுரைக்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்கப்படவுமில்லை” என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள். பிறகு அவர்கள் அவனது உடலை ஒரு குழியில் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டுவந்து அலீ (ரலி) அவர்களுக்கு முன்னால் வைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோதும் காரிஜிய்யாக்கள் குறித்து அலீ (ரலி) கூறியபோதும் அங்கு நான் இருந்தேன்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)

குறிப்பு : உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) என்பவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாவார்.

“இவர்கள் பேசும் உண்மை, நாவால் மட்டுமே. ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது” என்று அலீ (ரலி) கூறியபோது தம் தொண்டையைச் சுட்டிக்காட்டினார்கள்.

“அந்தக் கறுப்பு மனிதனை நான் பார்த்தேன்” என்று இப்னு ஹுனைன் (ரஹ்) கூறியதாக புகைர் (ரஹ்) வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment