حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ
أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ الرَّجُلِ يُصْبِحُ جُنُبًا أَيَصُومُ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْبِحُ جُنُبًا مِنْ غَيْرِ احْتِلَامٍ ثُمَّ يَصُومُ
நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், “பெருந்துடக்குடன் காலை (சுப்ஹு) நேரத்தை அடைந்த ஒருவர் நோன்பைத் தொடரலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உறக்கத்தில்) ஸ்கலிதம் ஏற்பட்டதால் அல்லாமல் (தாம்பத்திய உறவில் ஈடுபட்டு), பெருந் துடக்குடையவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடருவார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)