அத்தியாயம்: 13, பாடம்: 09, ஹதீஸ் எண்: 1839

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَطِيَّةَ ‏ ‏قَالَ ‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَمَسْرُوقٌ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْنَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ الصَّلَاةَ قَالَتْ أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ الصَّلَاةَ قَالَ قُلْنَا ‏ ‏عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ ‏ ‏قَالَتْ كَذَلِكَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏زَادَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَالْآخَرُ ‏ ‏أَبُو مُوسَى

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்களின் இரு தோழர்களில் ஒருவர் (நேரம் வந்தவுடன்) தாமதிக்காமல் விரைந்து நோன்பு துறக்கின்றார்; (மஃக்ரிப் தொழுகையை) விரைந்து தொழுகின்றார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகின்றார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி), “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)

குறிப்பு : அபூகுறைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “இன்னொரு நபித்தோழர் அபூமூஸா (ரலி) ஆவார்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment