و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ عَنْ أَبِي عَطِيَّةَ قَالَ
دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ لَهَا مَسْرُوقٌ رَجُلَانِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِلَاهُمَا لَا يَأْلُو عَنْ الْخَيْرِ أَحَدُهُمَا يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ وَالْآخَرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ فَقَالَتْ مَنْ يُعَجِّلُ الْمَغْرِبَ وَالْإِفْطَارَ قَالَ عَبْدُ اللَّهِ فَقَالَتْ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது மஸ்ரூக், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களில் நன்மையில் குறைவைக்காத இருவர் உள்ளனர். அவ்விருவரில் ஒருவர் மஃக்ரிப் தொழுகையையும் நோன்பு துறப்பதையும் விரைவாகவே செய்கின்றார். மற்றொருவர் அவ்விரண்டையுமே தாமதப்படுத்துகிறார்” என்று கூறினார். அப்போது, “நோன்பு துறப்பதையும் மஃக்ரிபையும் விரைவு படுத்துபவர் யார்?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்” என்றார் மஸ்ரூக். ஆயிஷா (ரலி), “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்வார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)