அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2127

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

‏أَقْبَلْنَا مُهِلِّينَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِحَجٍّ مُفْرَدٍ وَأَقْبَلَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏بِعُمْرَةٍ حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِسَرِفَ ‏ ‏عَرَكَتْ ‏ ‏حَتَّى إِذَا قَدِمْنَا طُفْنَا ‏ ‏بِالْكَعْبَةِ ‏ ‏وَالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏يَحِلَّ ‏ ‏مِنَّا مَنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏هَدْيٌ ‏ ‏قَالَ فَقُلْنَا حِلُّ مَاذَا قَالَ الْحِلُّ كُلُّهُ فَوَاقَعْنَا النِّسَاءَ وَتَطَيَّبْنَا بِالطِّيبِ وَلَبِسْنَا ثِيَابَنَا وَلَيْسَ بَيْنَنَا وَبَيْنَ ‏ ‏عَرَفَةَ ‏ ‏إِلَّا أَرْبَعُ لَيَالٍ ثُمَّ أَهْلَلْنَا ‏ ‏يَوْمَ التَّرْوِيَةِ ‏ ‏ثُمَّ دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فَوَجَدَهَا تَبْكِي فَقَالَ مَا شَأْنُكِ قَالَتْ شَأْنِي أَنِّي قَدْ حِضْتُ وَقَدْ ‏ ‏حَلَّ النَّاسُ ‏ ‏وَلَمْ ‏ ‏أَحْلِلْ ‏ ‏وَلَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَالنَّاسُ يَذْهَبُونَ إِلَى الْحَجِّ الْآنَ فَقَالَ ‏ ‏إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ ‏ ‏آدَمَ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ ‏ ‏أَهِلِّي بِالْحَجِّ ‏ ‏فَفَعَلَتْ ‏ ‏وَوَقَفَتْ الْمَوَاقِفَ ‏ ‏حَتَّى إِذَا طَهَرَتْ طَافَتْ ‏ ‏بِالْكَعْبَةِ ‏ ‏وَالصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏ثُمَّ قَالَ قَدْ حَلَلْتِ مِنْ حَجِّكِ وَعُمْرَتِكِ جَمِيعًا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ فِي نَفْسِي أَنِّي لَمْ أَطُفْ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏حَتَّى حَجَجْتُ قَالَ فَاذْهَبْ بِهَا يَا ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ ‏ ‏فَأَعْمِرْهَا مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏وَذَلِكَ ‏ ‏لَيْلَةَ ‏ ‏الْحَصْبَةِ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏ ‏دَخَلَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏وَهِيَ تَبْكِي فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏إِلَى آخِرِهِ وَلَمْ يَذْكُرْ مَا قَبْلَ هَذَا مِنْ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مَطَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏فِي حَجَّةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَهَلَّتْ ‏ ‏بِعُمْرَةٍ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا ‏ ‏سَهْلًا ‏ ‏إِذَا هَوِيَتْ الشَّيْءَ ‏ ‏تَابَعَهَا ‏ ‏عَلَيْهِ فَأَرْسَلَهَا مَعَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ‏ ‏فَأَهَلَّتْ ‏ ‏بِعُمْرَةٍ مِنْ ‏ ‏التَّنْعِيمِ ‏ ‏قَالَ ‏ ‏مَطَرٌ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏فَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِذَا حَجَّتْ صَنَعَتْ كَمَا صَنَعَتْ مَعَ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் தல்பியா கூறியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) உம்ராவிற்காக (முஹ்ரிமாகி) வந்தார்கள். நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஸரிஃப்’ எனுமிடத்திற்கு வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் இறையில்லம் கஅபா, ஸஃபா-மர்வா ஆகியவற்றைச் சுற்றினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.

அப்போது நாங்கள், “(இஹ்ராமிலிருந்து விடுபட்டால் எங்களுக்கு) எதுவெல்லாம் அனுமதிக்கப் பட்டுள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அனைத்துமே அனுமதிக்கப்படும்” என்றார்கள். ஆகவே, நாங்கள் (எங்கள்) மனைவியருடன் கூடி மகிழ்ந்தோம்; நறுமணம் பூசிக்கொண்டோம்; (வழக்கமான) எங்கள் ஆடைகளை அணிந்துகொண்டோம்.

அன்றைய தினத்திற்கும் அரஃபாவுக்குமிடையே நான்கு இரவுகளே இருந்தன. பின்னர் நாங்கள் ‘தர்வியா’ (துல்ஹஜ் எட்டாம்) நாளில் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி, ‘தல்பியா’ சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது, “உனது பிரச்சினை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “எனது பிரச்சினை என்னவென்றால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்க, நான் மட்டும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவுமில்லை. இப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகப் போய்க் கொண்டிருக்கின்றனர்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இ(ந்த மாதவிடாயான)து, ஆதமின் பெண்மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, நீ குளித்த பின்னர் ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகி ‘தல்பியா’ சொல்லிக்கொள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு, தங்க வேண்டிய (புனித) இடங்களில் தங்கினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவையும், ஸஃபா-மர்வாவையும் சுற்றினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ உனது ஹஜ்ஜிலிருந்தும் உம்ராவிலிருந்தும் விடுபட்டு விட்டாய்” என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் (உம்ராவுக்காக) இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வராமலேயே ஹஜ் செய்து முடித்துவிட்டேனே எனக் கவலைப்படுகிறேன்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (என் சகோதரரிடம்) “அப்துர் ரஹ்மானே! நீ இவரை ‘தன்யீமி’ற்கு அழைத்துச் சென்று உம்ராச் செய்யவைப்பாயாக!” என்றார்கள். அவர்கள் ‘முஹஸ்ஸபி’ல் தங்கியிருந்த இரவில் இது நடந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்புகள்: இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அழுது கொண்டிருந்தார்கள்…” என்பதிலிருந்து தொடங்குகிறது.

முஆத் இப்னு ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) செய்த ஹஜ்ஜின்போது, ஆயிஷா (ரலி), உம்ராவிற்காக முஹ்ரிமாகினார்கள் …” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. மேலும் அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இதமாக நடந்து கொள்ளும் மனிதராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) ஒன்றை ஆசைப்பட்டபோது, அவரது வழியிலேயே அவரை விட்டுவிட்டார்கள். அதனால்தான், அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரு (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களை ‘தன்யீமி’ற்கு அனுப்பி, உம்ராவிற்காக தல்பியா கூறச் சொன்னார்கள்” என அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது. மேலும், “… எனவே, ஆயிஷா (ரலி) ஹஜ் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் செய்ததைப் போன்றே செய்வார்கள்” என்று அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment