அத்தியாயம்: 15, பாடம்: 15.17, ஹதீஸ் எண்: 2133

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو نُعَيْمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ نَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏قَدِمْتُ ‏ ‏مَكَّةَ ‏ ‏مُتَمَتِّعًا ‏ ‏بِعُمْرَةٍ قَبْلَ ‏ ‏التَّرْوِيَةِ ‏ ‏بِأَرْبَعَةِ أَيَّامٍ فَقَالَ النَّاسُ تَصِيرُ حَجَّتُكَ الْآنَ مَكِّيَّةً فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏فَاسْتَفْتَيْتُهُ ‏ ‏فَقَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّهُ حَجَّ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مَعَهُ وَقَدْ ‏ ‏أَهَلُّوا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏مُفْرَدًا ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ فَطُوفُوا ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏وَقَصِّرُوا وَأَقِيمُوا حَلَالًا حَتَّى إِذَا كَانَ ‏ ‏يَوْمُ التَّرْوِيَةِ ‏ ‏فَأَهِلُّوا ‏ ‏بِالْحَجِّ وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏قَالُوا كَيْفَ نَجْعَلُهَا ‏ ‏مُتْعَةً ‏ ‏وَقَدْ سَمَّيْنَا الْحَجَّ قَالَ افْعَلُوا مَا آمُرُكُمْ بِهِ فَإِنِّي لَوْلَا أَنِّي سُقْتُ ‏ ‏الْهَدْيَ ‏ ‏لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ بِهِ وَلَكِنْ لَا يَحِلُّ مِنِّي حَرَامٌ ” ‏حَتَّى يَبْلُغَ ‏ ‏الْهَدْيُ ‏ ‏مَحِلَّهُ “‏ ‏‏فَفَعَلُوا

நான் துல்ஹஜ் பிறை எட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் உம்ராவிற்குப் பின் ஹஜ் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். அப்போது மக்கள், “(இப்படி உம்ராவிற்குப் பின் ஹஜ் செய்தால்) உமது ஹஜ் தற்போது மக்காவாசிகளின் ஹஜ்ஜாக மாறிவிடுகிறது (குறைந்த நன்மையே உமக்குக் கிடைக்கும்)” என்று கூறினர். நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்), “ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்ஸாரி (ரலி) என்னிடம் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்த ஆண்டில் நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது (அவர்களுடன் வந்த) மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்கு மட்டும் முஹ்ரிமாகி இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் தோழர்களிடம்), “நீங்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா-மர்வா இடையே ஓடிவிட்டு, தலைமுடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக முஹ்ரிமாகிக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னால் (ஹஜ்ஜுக்கு எனச்) செய்துவந்த இஹ்ராமை (உம்ராவை நிறைவு செய்து ஹஜ்ஜுக்குச் செய்யும்) ‘தமத்துஉ’ ஆக மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ் எனக் குறிப்பிட்ட இஹ்ராமை எவ்வாறு உம்ராவாக ஆக்கிக் கொள்வது?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் கட்டளை இடுவதைச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வரவில்லையாயின், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்றே நானும் செய்திருப்பேன். பலிப் பிராணி(யைக் கொண்டுவந்ததால் அது) உரிய இடத்தை அடைவதற்கு முன் (பலியிடும்வரை) நான் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது (2:196)” என்றார்கள். உடனே தோழர்கள் அவ்வாறே செய்தனர்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபூஷிஹாப் மூஸா பின் நாஃபிஉ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment