அத்தியாயம்: 15, பாடம்: 15.22, ஹதீஸ் எண்: 2145

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏

‏أَنَّهُ كَانَ يُفْتِي ‏ ‏بِالْمُتْعَةِ ‏ ‏فَقَالَ لَهُ رَجُلٌ رُوَيْدَكَ بِبَعْضِ فُتْيَاكَ فَإِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي ‏ ‏النُّسُكِ ‏ ‏بَعْدُ حَتَّى لَقِيَهُ بَعْدُ فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏قَدْ عَلِمْتُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَهُ وَأَصْحَابُهُ وَلَكِنْ كَرِهْتُ أَنْ يَظَلُّوا ‏ ‏مُعْرِسِينَ بِهِنَّ ‏ ‏فِي الْأَرَاكِ ثُمَّ يَرُوحُونَ فِي الْحَجِّ تَقْطُرُ رُءُوسُهُمْ

“தமத்துஉ ஹஜ் செல்லும்” என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒருவர் (வந்து), “நீங்கள் உங்களது தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) ஹஜ்ஜின் செயல்முறைகளில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார். பிறகு நான் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி),

“நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும், ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) ‘அராக்’ பகுதியில் கூடி மகிழ்ந்து(குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வது எனக்கு வெறுப்பாயிருந்தது. (ஆகவேதான், ஹஜ் பருவத்தின்போது உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு : ஹஜ் பருவத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு, அதை நிறைவேற்றிவிட்டு. ஹஜ்ஜுக்கு இடைப்பட்ட நாட்களில் மனைவியருடன் கூடி மகிழ்ந்துவிட்டு, பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்குத் தனியாக இஹ்ராம் பூண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவது ‘தமத்துஉ’ முறை ஹஜ் ஆகும்.

Share this Hadith:

Leave a Comment