அத்தியாயம்: 15, பாடம்: 15.23, ஹதீஸ் எண்: 2151

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الشَّعْثَاءِ ‏ ‏قَالَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏إِبْرَاهِيمَ النَّخَعِيَّ ‏ ‏وَإِبْرَاهِيمَ التَّيْمِيَّ ‏ ‏فَقُلْتُ إِنِّي ‏ ‏أَهُمُّ ‏ ‏أَنْ أَجْمَعَ الْعُمْرَةَ وَالْحَجَّ الْعَامَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِبْرَاهِيمُ النَّخَعِيُّ ‏ ‏لَكِنْ أَبُوكَ لَمْ يَكُنْ لِيَهُمَّ بِذَلِكَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏بَيَانٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّهُ مَرَّ ‏ ‏بِأَبِي ذَرٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏بِالرَّبَذَةِ ‏ ‏فَذَكَرَ لَهُ ذَلِكَ فَقَالَ إِنَّمَا ‏ ‏كَانَتْ لَنَا خَاصَّةً دُونَكُمْ

நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, “நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்றேன்.

அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), “ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) இவ்வாறு செய்பவராக இருக்கவில்லை” என்றார்கள்.

இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) கூறினார்கள்:

என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘அர்ரபதா’ எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றி வினவியபோது அபூதர் (ரலி), “அது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது; உங்களுக்கு உரியதன்று” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment