அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2168

‏و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا ‏
‏قَالَ ‏ ‏بَكْرٌ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَنَسًا ‏ ‏فَحَدَّثْتُهُ بِقَوْلِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏مَا تَعُدُّونَنَا إِلَّا صِبْيَانًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا

“நபி (ஸல்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் அதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்” என்றார்கள்.

பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி), “என்னை நீங்கள் (ஒன்றுமறியா) நம் சிறுவர்களைப் போல் எண்ணிக் கொண்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்’ (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)

Share this Hadith: