அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2199

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏
‏عَطَاءً ‏ ‏يُخْبِرُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ أَنَا ‏ ‏وَابْنُ عُمَرَ ‏ ‏مُسْتَنِدَيْنِ إِلَى حُجْرَةِ ‏ ‏عَائِشَةَ ‏ ‏وَإِنَّا لَنَسْمَعُ ‏ ‏ضَرْبَهَا بِالسِّوَاكِ ‏ ‏تَسْتَنُّ ‏ ‏قَالَ
فَقُلْتُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَجَبٍ قَالَ نَعَمْ فَقُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏
‏أَيْ أُمَّتَاهُ أَلَا تَسْمَعِينَ مَا يَقُولُ ‏ ‏أَبُو عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَتْ وَمَا يَقُولُ قُلْتُ يَقُولُ اعْتَمَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي رَجَبٍ فَقَالَتْ يَغْفِرُ اللَّهُ ‏ ‏لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏لَعَمْرِي ‏ ‏مَا اعْتَمَرَ فِي رَجَبٍ وَمَا اعْتَمَرَ
مِنْ عُمْرَةٍ إِلَّا وَإِنَّهُ لَمَعَهُ قَالَ ‏ ‏وَابْنُ عُمَرَ ‏ ‏يَسْمَعُ فَمَا قَالَ لَا وَلَا نَعَمْ سَكَتَ

நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் என் (சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி), பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்த சப்தத்தை நாங்கள் செவியுற்றோம்.

அப்போது நான், “அபூ அப்திர் ரஹ்மான்! நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்களா?” என்று (இப்னு உமர் (ரலி) அவர்களிடம்) கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். “நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்கள் என்று சொல்கின்றார்”
என்றேன்.

அப்போது ஆயிஷா (ரலி), “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கட்டும்! என் ஆயுள்மீது அறுதியாக! நபி (ஸல்) ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததில்லை. நபியவர்கள் உம்ராச் செய்தபோதெல்லாம் அவர்களுடன் அபூஅப்திர் ரஹ்மானும் இருந்திருக்கிறார் (ஆனால், இப்போது அவர் மறந்துவிட்டார்)” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த இப்னு உமர் (ரலி) இல்லை என்றோ, ஆம் என்றோ சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர்
(ரஹ்)

Share this Hadith: