அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2251

‏و حَدَّثَنِيهِ ‏ ‏يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زِيَادٌ يَعْنِي الْبَكَّائِيَّ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرِ بْنِ مُدْرِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏وَالْأَسْوَدِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَا سَمِعْنَا ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ ‏ ‏بِجَمْعٍ: ‏

سَمِعْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏هَاهُنَا يَقُولُ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ثُمَّ لَبَّى وَلَبَّيْنَا مَعَهُ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), முஸ்தலிஃபாவில் “அல்பகரா அத்தியாயம் அருளப்பெற்றவர் (முஹம்மது – ஸல்) இந்த இடத்தில் ‘லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்’ என(தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம்.

அறிவிப்பாளர்கள் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) & அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2250

‏و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنٌ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرِ بْنِ مُدْرِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ: ‏

أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏لَبَّى حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏فَقِيلَ أَعْرَابِيٌّ هَذَا فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنَسِيَ النَّاسُ أَمْ ضَلُّوا سَمِعْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏يَقُولُ فِي هَذَا الْمَكَانِ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது தல்பியாச் சொன்னார்கள். அப்போது “இவர் ஒரு கிராமவாசியா?” என்று கேட்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “மக்கள் மறந்துவிட்டனரா, அல்லது வழிதவறி விட்டனரா? அல்பகரா அத்தியாயம் அருளப்பெற்றவர் (முஹம்மது – ஸல்) இந்த இடத்தில் ‘லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்’ என(தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2249

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏كَثِيرِ بْنِ مُدْرِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ: ‏

قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏وَنَحْنُ ‏ ‏بِجَمْعٍ ‏ ‏سَمِعْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏يَقُولُ فِي هَذَا الْمَقَامِ ‏ ‏لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ

நாங்கள் முஸ்தலிஃபாவில் இருந்தபோது, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “அல் பகரா அத்தியாயம் அருளப்பெற்றவர் (முஹம்மது – ஸல்) இந்த இடத்தில் ‘லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்’ என்று (தல்பியா) கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2248

‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَعْبَدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏وَكَانَ ‏ ‏رَدِيفَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, أَنَّهُ قَالَ: ‏

فِي عَشِيَّةِ ‏ ‏عَرَفَةَ ‏ ‏وَغَدَاةِ ‏ ‏جَمْعٍ ‏ ‏لِلنَّاسِ حِينَ ‏ ‏دَفَعُوا ‏ ‏عَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَهُوَ ‏ ‏كَافٌّ ‏ ‏نَاقَتَهُ حَتَّى دَخَلَ مُحَسِّرًا وَهُوَ مِنْ ‏ ‏مِنًى ‏ ‏قَالَ عَلَيْكُمْ ‏ ‏بِحَصَى الْخَذْفِ ‏ ‏الَّذِي ‏ ‏يُرْمَى بِهِ ‏ ‏الْجَمْرَةُ ‏ ‏وَقَالَ لَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي حَتَّى رَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏

و حَدَّثَنِيهِ ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ وَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ وَزَادَ فِي حَدِيثِهِ وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُشِيرُ بِيَدِهِ كَمَا ‏ ‏يَخْذِفُ ‏ ‏الْإِنْسَانُ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபா நாள் மாலையிலும் முஸ்தலிஃபா நாள் காலையிலும் திரும்பிக்கொண்டிருந்த மக்களிடம், ‘மெதுவாகச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒட்டகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மினாவிலுள்ள முஹஸ்ஸிர் பள்ளப் பாதையில் நுழைந்ததும், ‘ஜம்ராவில் எறிவதற்காக, சுண்டி எறியப்படும் சிறு கற்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்தவரான ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும் அதில், (‘சுண்டி எறியப்படும் சிறு கற்கள்’ என்று கூறும்போது) “ஒருவர், கல் சுண்டி விளையாடுவதைப் போன்று தமது கையால் சைகை செய்தார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2247

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْدَفَ ‏ ‏الْفَضْلَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏قَالَ فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏الْفَضْلَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டபோது, தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் (என் சகோதரர்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களை ஏற்றிக்கொண்டார்கள். ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் பத்தாவது நாளில்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” என என்னிடம் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2246

‏قَالَ ‏ ‏كُرَيْبٌ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْفَضْلِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ ‏ ‏الْجَمْرَةَ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ராவை அடையும்வரை தல்பியா சொல்லிக்கொண்டே இருந்தார்கள்” என ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக குறைப் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2245

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ: ‏

رَدِفْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَلَمَّا بَلَغَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الشِّعْبَ ‏ ‏الْأَيْسَرَ الَّذِي دُونَ ‏ ‏الْمُزْدَلِفَةِ ‏ ‏أَنَاخَ ‏ ‏فَبَالَ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ الْوَضُوءَ فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا ثُمَّ قُلْتُ الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَتَى ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَصَلَّى ثُمَّ ‏ ‏رَدِفَ ‏ ‏الْفَضْلُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَدَاةَ ‏ ‏جَمْعٍ

அரஃபாவிலிருந்து திரும்புகையில் நான் வாகனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடப்புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை மண்டியிடவைத்துவிட்டுச் சென்று, சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பிவந்தார்கள். நான் அவர்களுக்கு உளூ செய்யத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் சுருக்கமாக உளூச் செய்தார்கள். நான், “தொழுகையா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில் நடக்கும்)” எனக் கூறி விட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்ட அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)