அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2261

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ سِبَاعٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ: ‏

أَنَّهُ كَانَ ‏ ‏رَدِيفَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ ‏ ‏أَفَاضَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَلَمَّا جَاءَ ‏ ‏الشِّعْبَ ‏ ‏أَنَاخَ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏ثُمَّ ذَهَبَ إِلَى ‏ ‏الْغَائِطِ ‏ ‏فَلَمَّا رَجَعَ صَبَبْتُ عَلَيْهِ مِنْ ‏ ‏الْإِدَاوَةِ ‏ ‏فَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ ثُمَّ أَتَى ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏فَجَمَعَ بِهَا بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்க வைத்துவிட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பியபோது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (இஷா நேரத்தில்) அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் அடுத்தடுத்துத் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

Share this Hadith: